2013-04-30 16:08:46

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி


ஏப்.30,2013. நாம் வேலை செய்யும்போது கடவுளின் வல்லமையில் நமது நம்பிக்கையை வைப்போம். அவரோடு சேர்ந்து நாம் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். அவரது சீடர்களாக இருப்பதன் மகிழ்ச்சியை அவர் நமக்குத் தருவார்.
இவ்வாறு இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 29, இத்திங்கள் நண்பகலோடு அறுபது இலட்சத்தை எட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தைத் தொடங்கினார். அவர் தனது பாப்பிறைத் தலைமைப் பணியிலிருந்து விலகியபோது 30 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்த டுவிட்டர் பக்கத்தைப் பார்த்திருந்தார்கள்.
கடந்த மார்ச் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் @Pontifex என்ற முகவரியில் தனது டுவிட்டர் பக்கத்தைத் திறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.