2013-04-29 17:01:37

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிய பதிப்பு வெளியீடு


ஏப்.29,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூலின் ஆசிய பதிப்பை பெங்களூருவில் வெளியிட்டார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.
Asian Trading Corporation பதிப்பகத்தாரால் 'பிரான்சிஸ், புதிய உலகின் திருத்தந்தை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், அந்திரேயா தொரினெல்லி என்பவரால் எழுதப்பட்டதாகும்.
பெங்களூருவின் இரட்சகர் துறவு சபை பயிற்சி இல்லத்தின் வளாகத்திலுள்ள தூய ஆவி கோவிலின் வைர விழாவின் போது இப்புத்தகம் வெளியிடப்பட்ட வைபவத்தில் இந்தியாவின் திருஅவைத் தலைவர்களுடன் நாட்டின் நான்கு கர்தினால்களும் பெங்களூரு பேராயரும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.