இரு கொரிய நாடுகளிடையே அமைதியை ஊக்குவிக்கும் விளக்கு
ஏப்.24,2013. இரு கொரிய நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் 80 தென் கொரிய
புத்தமதப் பிக்குகளிடம் அமைதி விளக்கு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதென ஆசியச் செய்தி நிறுவனம்
கூறியது. உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் புத்தமதத்தினர் கொரிய
நாடுகளில் அமைதி ஏற்படுவதற்குச் செபித்துவரும்வேளை, சித்தார்த்த கவுதம புத்தர் பிறந்தநாளைக்
குறிக்கும் விதமாக இந்த விளக்கானது வருகிற மே முதல் தேதியன்று கொரியாவைச் சென்றடையும். நேபாள
அரசுத்தலைவர் Ram Baran Yadav மற்றும் Lumbini புத்தமத சமூகத்தின் முயற்சியினால் இவ்வமைதி
விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.