பாஸ்டன் கர்தினால் : குண்டுவெடிப்பு வன்முறைக்கு அன்புக் கலாச்சாரத்தால் பதில் சொல்வோம்
ஏப்.23,2013. இவ்வுலகை மரணக் கலாச்சாரம் பெருமளவில் அச்சுறுத்தி வந்தாலும், நல்ல ஆயராம்
கிறிஸ்துவின் ஒளி இருளை விரட்டி, வாழ்வு, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்துக்கு
இட்டுச்செல்லும் பாதையை நமக்கு ஒளிர்விக்கின்றது என்று பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley
கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு வன்முறையும்
உர ஆலை வெடி விபத்தும் சமூகம் எதிர்கொள்ளும் இடர்நிலைகளைக் காட்டுகின்றன என்று இஞ்ஞாயிறு
மறையுரையில் கூறிய கர்தினால் O'Malley, நாம் அன்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்
என்று கூறினார். கடந்த வாரத்தில் இடம்பெற்ற பாஸ்டன் குண்டுவெடிப்பில் 3 பேர் இறந்தனர்
மற்றும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வன்முறை தொடர்பாக, இரஷ்ய மாநிலமான Chechnyaவைச்
சேர்ந்த 26 வயது Tamerlan Tsarnaev, 19 வயது Dzhokar Tsarnaev ஆகிய இரு சகோதரர்கள் குற்றவாளிகளாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையிடமிருந்து இவர்கள் தப்பி ஓடியபோது Tamerlan சுட்டுக்
கொல்லப்பட்டார்.