குருத்துவக் கல்லூரி அதிபர் மரணம் தொடர்புடைய விசாரணைகளை கர்நாடக அரசு விரைவுபடுத்த அழைப்பு
ஏப்.22,2013. இந்தியாவின் பெங்களூரு தூய பேதுரு குருத்துவக் கல்லூரி அதிபர் கொலைச்செய்யப்பட்டு
மூன்று வாரங்கள் கடந்தபின்னரும், கொலையாளிகளைக் கைதுசெய்ய காவல்துறை தவறியுள்ளது குறித்து
தன் கவலையை வெளியிட்டுள்ளார் அப்பெருமறைமாவட்ட பேராயர் பெர்னார்டு மொராஸ். காவல்துறையினர்
தங்கள் பணிகளைச் சிறப்பாகவேச் செய்து வருகின்றபோதிலும், கொலையாளியையோ கொலைக்கான காரணத்தையோ
கண்டுபிடிக்க காலம் தாழ்த்தி வருவது கவலைதருவதாக உள்ளது என்றார் பேராயர். இம்மாதம்
முதல்தேதி அதிகாலை தன் அறை அருகே கொலையுண்டு கிடந்த குருத்துவக் கல்லூரி அதிபர் அருள்பணி
தாமசின் அறையிலிருந்து எதுவும் திருட்டுப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குருத்துவக்
கல்லூரி அதிபர் அருள்பணி கே.ஜே. தாமசின் மரணம் தொடர்புடைய விசாரணைகளை கர்நாடக அரசு விரைவுபடுத்தவேண்டும்
என தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார் பெங்களூரு பேராயர் மொராஸ்.