2013-04-22 17:15:29

கிறிஸ்தவர்களைத் தாக்கும் எகிப்து இஸ்லாமியர்களை காவல்துறை காப்பதாக குற்றாசாட்டு


ஏப்.22,2013. எகிப்து தலைநகர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவிலில் அடக்கச்சடங்கில் சில இஸ்லாமியக் குழுக்கள் கலகம் செய்தபோது அந்நாட்டு இராணுவம் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கலகக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக தலத்திருஅவை தெரிவித்தது.
வன்முறை இடம்பெறும் என காவல்துறைக்கு முன்னரே தெரிந்திருந்தும் முதலிலேயே பேராலயத்திற்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார் எகிப்து கத்தோலிக்க ஆயர் பேரவையின் அதிகாரி அருள்பணி Rafik Greiche.
கலவரம் துவங்கி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே வந்தபோதிலும், கிறிஸ்தவர்களைத் தாக்கியவர்களுக்கே காவல்துறையால் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றார் அருள்பணி.
இம்மாதம் ஏழாம் தேதி இடம்பெற்ற தாக்குதல் குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ள எகிப்தின் கிறிஸ்தவத் தலைவர்கள், எகிப்து கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமைக்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளவேளையில் இஸ்லாமியர்களின் இந்தத் தாக்குதல், கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி நாட்டைவிட்டு விரட்டுவதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.