2013-04-20 16:16:12

இலத்தீன் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்காகச் செபிக்குமாறு கர்தினால் Ouellet அழைப்பு


ஏப்.20,2013. இலத்தீன் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அவசியமான புனிதம், உண்மை, ஒன்றிப்பு, நற்செய்தி அறிவித்தல் ஆகியவற்றுக்கானப் புதிய உந்துதலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி கொண்டு வருகின்றது என்று இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Marc Ouellet கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியை ஏற்று ஏப்ரல் 19ம் தேதியோடு ஒரு மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ள கர்தினால் Ouellet, திருஅவை வரலாற்றில் முதன்முறையாக இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
புனித பேதுருவின் வழிவருபவராக இறைவன் தேர்ந்தெடுத்துள்ள இந்த மகனோடும் இந்த மேய்ப்பரோடும் அமெரிக்கக் கண்டத்தின் கிறிஸ்தவ சமுதாயமும் அனைத்து மக்களும் மிக நெருக்கமாக இருந்து தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுள்ளார் கர்தினால் Ouellet.
நம்பிக்கையின் கண்டமான இலத்தீன் அமெரிக்கா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபிக்குமாறும், உலகின் இறுதி எல்லைவரை நற்செய்தியை அறிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Ouellet.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.