மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறுவது, மனித உரிமைகளை மீறும் செயல்
: WHO
ஏப்.19,2013. ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யத்
தவறுவது, மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் மருத்துவர்
Marie-Paule Kieny கூறினார். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்துப் பேசிய
மருத்துவர் Kieny, ஒரு நாட்டில் பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கைச் சரிவரத் தெரியாதபோது,
அக்குழந்தைகளின் நலவாழ்வைப் பாதுகாப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளைக் கணக்கிடுவது கடினம்
என்று தெரிவித்தார். மேலும், இச்சனிக்கிழமையன்று தொடங்கும் உலக நோய் எதிர்ப்புச் சக்தி
வாரத்தையொட்டி பேசிய WHO நிறுவனத்தின் உதவி இயக்குனர் Flavia Bustreo, 2 கோடியே 20 இலட்சம்
சிறாருக்கு, தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களுக்கானத் தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படவில்லை
என்று கூறினார். தடுப்பூசிகள் போடுவதால், ஆண்டுதோறும் 20 இலட்சம் முதல் 30 இலட்சம்
வரையிலான குழந்தைகளின் மரணங்களை நிறுத்த முடியும் என்று Bustreo தெரிவித்தார்.