நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் நறுமண 'spray'போல சூழ்ந்திருப்பவராஇறைவன் - திருத்தந்தையின் கேள்வி
ஏப்.18,2013. விசுவாசத்தின் வழியே வரும் மகிழ்வு, இயேசுவைச் சந்தித்தோம் என்பதில் வரும்
மகிழ்வு இவையே நமக்கு நீடித்த அமைதியை வழங்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். வத்திக்கானில்
திருத்தந்தை தங்கியுள்ள புனித மார்த்தா இல்லத்தில் இவ்வியாழன் காலை வத்திக்கான் பாதுகாப்புத்
துறை உயர் அதிகாரிகளுக்கு ஆற்றிய திருப்பலியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார். எத்தியோப்பிய
அரசியின் நிதியமைச்சருக்கு, கிறிஸ்துவை அறிமுகப்படுத்திய பிலிப் அவர்கள் குறித்து, திருத்தூதர்
பணிகள் நூலில் காணப்படும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய
மறையுரையில், அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் உண்மையான ஆவலுடன் தேடும்போது இறைவனைக் காண
முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார். நாம் விசுவசிக்கும் இறைவன், நம்மைச் சுற்றிப்
படர்ந்திருக்கும் நறுமண 'spray' போல நம்மைச் சூழ்ந்திருப்பவரா, அல்லது நம்மைச் சூழ்ந்திருந்து
நம்மைக் காக்கும் ஓர் உறவா என்ற கேள்வியைத் தன் மறையுரையில் எழுப்பினார் திருத்தந்தை. திருப்பலியின்
இறுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தன் சிறப்பான நன்றியையும்,
வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.