2013-04-18 16:31:40

Texas விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தி


ஏப்.18,2013. அமெரிக்காவின் Texas மாநிலத்தில் நிகழ்ந்துள்ள விபத்தில் இறந்தோர், காயமடைந்தோர், மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்காகவும் என்னுடன் இணைந்து செபியுங்கள் என்ற செய்தியைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @pontifex என்ற தன் Twitter பக்கத்தில் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
Texas மாநிலத்தின் Waco நகருக்கருகே அமைந்துள்ள உரத் தொழிற்சாலையில் இப்புதன் இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், இவ்வெண்ணிக்கை குறைந்தது 10 பேர் என்றும், அதிகப்படியாக, 70 பேர் என்றும் ஊடகங்கள் கூறி வருகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த 2600க்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.