2013-04-15 16:56:23

புது டெல்லியில் சீரோ மலங்கரா ரீதியின் புதிய சமூகப்பணி மையம்


ஏப்.15,2013. சிரோ மலங்கரா கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் புதிய சமூகப்பணி மையத்திற்கு இஞ்ஞாயிறன்று புது டெல்லியின் Jasolaவில் அடிக்கல்லை நாட்டினார் சீரோ மலங்கரா கர்தினால் Baselios Cleemis.
இயேசு கிறிஸ்துவின் அன்பின் அடையாளமாக நின்று அனைவரையும் வரவேற்கும் இந்த மையம் 'பசித்திருப்போருக்கு உணவு' என்ற திட்டத்தின் கீழ் மதம், இனம், ஜாதி என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சேவையாற்றும் என்றார் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை தலைவர் கர்தினால் Cleemis.
சீரோ மலங்கரா திருஅவையின் அங்கத்தினர்கள் வழங்கும் பொருளுதவியுடன் நடத்தப்படும் இத்திட்டம் ஏற்கனவே ஒவ்வொருநாளும் புது டெல்லியின் சேரிப்குதிகளிலும், அனாதை இல்லங்களிலும், புனர்வாழ்வு மையங்களிலும், உணவுக்கு வழியில்லா ஏழை நோயாளிகள் மத்தியிலும் நூற்றுக்கணக்கான உணவுப் பொட்டலங்களை ஒவ்வொரு நாளும் வழங்கி வருகிறது எனவும் கூறினார் கர்தினால் Cleemis.

ஆதாரம் UCAN







All the contents on this site are copyrighted ©.