வத்திக்கான் அதிகாரி : நற்செய்தியை அறிவிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
அழைப்பு
ஏப்.13,2013. நற்செய்தி அறிவிக்கும் பணியில் புதிய தொழில்நுட்பத்தைத் துணிச்சலுடன் பயன்படுத்துமாறு
கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பேராயர்
Claudio Maria Celli. சிலே நாட்டு சந்தியாகோவில் நடைபெற்ற திருஅவையில் சமூகத்தொடர்பு
சாதனங்கள் குறித்த இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Celli, சமூகத்தொடர்பு
சாதனங்கள் பல்வேறு தலைமுறைகளால் பயன்படுத்தப்பட்டுவந்ததன் பரிணாம வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்களையும்
வெளியிட்டு, இவை இளையோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கங்கள் குறித்தும் விளக்கினார். புதிய
தொழில்நுட்பங்கள் திருஅவையின் மறைப்பணியின் அங்கங்களாக இருக்கின்றன என்றும், திருஅவையில்
சமூகத்தொடர்பு சாதனங்கள் மனிதர் பற்றிய உண்மையை அறிவிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்பதைப்
புரிந்துகொள்வதற்கு முந்தைய திருத்தந்தையர்கள் நமக்கு உதவியுள்ளார்கள் என்றும் கூறினார்
பேராயர் Celli. “சமூகத்தொடர்பு சாதனங்களும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும்
: 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொதுச்சங்கம் இக்காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்க
முடியுமா?” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கில் உரையாற்றினார் பேராயர் Celli.