அருள்திரு Udumala Bala வாரங்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்
ஏப்.13,2013. ஆந்திர மாநிலத்தின் வாரங்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்திரு Udumala
Bala Show Reddy அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். C.C.B.I
என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலராக 2006ம் ஆண்டுமுதல்
பணியாற்றிவரும் புதிய ஆயர் Udumala Bala Show Reddy, வாரங்கல் மறைமாவட்டத்தின் Ghanpurல்
1954ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்தவர். 1979ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட
இவர், உரோம் நகரில் 1994ம் ஆண்டில் அறநெறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஹைதராபாத்
புனித யோவான் குருத்துவக் கல்லூரியில் 1997ம் ஆண்டுவரை பேராசிரியராகவும், 2006ம் ஆண்டுவரை
அக்கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார் புதிய ஆயர் Udumala Bala. இவர் 2006ம்
ஆண்டு பெங்களூருவிலுள்ள C.C.B.I அலுவலகத்தில் பொதுச் செயலராகப் பணியைத் தொடங்கினார்.
வாரங்கல் மறைமாவட்ட முன்னாள் ஆயர் தும்மா பாலா ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்துக்கு 2011ம்
ஆண்டு மார்ச் 12ம் தேதி மாற்றப்பட்டதையடுத்து வாரங்கல் மறைமாவட்டம் இதுவரை ஆயரின்றி இருந்தது.
1952ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வாரங்கல் மறைமாவட்டத்தில் 66,385 கத்தோலிக்கர் உள்ளனர்.