வத்திகான் நாளிதழ் L’Osservatore Romanoவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு
திருத்தந்தை ஆற்றிய திருப்பலி
ஏப்.12,2013. திறந்த உள்ளத்துடன் இறைவனுக்குச் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடப்பதே
நமக்கு உண்மையான சுதந்திரம் வழங்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். கடந்த
ஒருமாத காலமாக திருத்தந்தை பிரான்சிஸ் தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில்
தினமும் காலை 7 மணிக்கு ஆற்றும் திருப்பலியில், வத்திகான் நாளிதழ் L’Osservatore Romanoவில்
பணியாற்றும் ஊழியர்கள் இவ்வியாழனன்று கலந்துகொண்டபோது, அவர்களுக்கு வழங்கிய மறையுரையில்
இவ்வாறு கூறினார். கடவுளின் குரலுக்கும், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கும் எப்போதும்
கவனமாய் செவிசாய்ப்பது நமது தேவை என்பதை திருத்தந்தை தன் குறுகிய மறையுரையில் எடுத்துரைத்தார். நமது
குறைகள் தவறான வழிகளில் நம்மை நடத்திச் சென்றாலும், இறைவன் என்றும் நம்மைக் கைவிடாமல்
தொடர்ந்து வழிநடத்துகிறார் என்ற எண்ணத்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.