2013-04-12 16:07:14

நைஜீரியாவில் Boko Haram வன்முறைக் குழுவின் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஏதுவான சூழல்


ஏப்.12,2013. Boko Haram என்ற வன்முறைக் குழுவின் உறுப்பினர்களில் பலர் தங்கள் ஆயுதங்களைக் களைந்து, சமுதாயத்தில் இணைவதற்கும், அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்கும் ஏதுவான சூழல் நைஜீரியாவில் உருவாகி வருகிறது.
2001ம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நைஜீரியாவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தவரான Goodluck Jonathan பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வன்முறையை வளர்த்து வருவது Boko Haram எனப்படும் இஸ்லாமியக் குழு. இக்குழுவினரின் பெரும்பாலான தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ ஆலயங்களே இலக்காகி வந்துள்ளன.
2011ம் ஆண்டு நைஜீரியாவின் வடபகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும், மொத்த வாக்குகளில் Goodluck Jonathan இடம் தோல்வியடைந்த இஸ்லாமியத் தலைவர் Muhammadu Buhari, தற்போதைய சமரச முயற்சிகளை ஆதரித்து வருகிறார்.
Abujaவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நைஜீரிய அரசுடன் இணைந்து Boko Haram குழுவுக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று MISNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : MISNA








All the contents on this site are copyrighted ©.