திருத்தந்தையுடன் Mozambiqueநாட்டுப் பிரதமர் சந்திப்பு
ஏப்.11,2013. Mozambique நாட்டுப் பிரதமர் Alberto Vaquina Clementine அவர்கள், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து, தன் நாட்டின் சார்பில்
வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2011ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, Mozambique நாட்டுக்கும்
வத்திக்கானுக்கும் இடையே உருவான நல்லுறவு மீண்டும் சென்ற ஆண்டு புதுப்பிக்கப்பட்டது என்பது
இச்சந்திப்பின்போது நினைவு கூரப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவை Mozambique நாட்டின்
முன்னேற்றத்திற்கு, சிறப்பாக அந்நாட்டின் கல்வி, நல வாழ்வு ஆகியவற்றில் காட்டும் அக்கறை
குறித்து பிரதமர் Clementine தன் பாராட்டைத் தெரிவித்தார். ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில்
நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டது. திருத்தந்தையைச்
சந்தித்தபின், பிரதமர் Clementine, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே
அவர்களையும், நாடுகளுடன் உறவு பணியில் ஈடுபடும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் தோமினிக்
மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.