2013-04-06 16:01:09

வெனெசுவேலா கர்தினால் சுதந்திரமான வாக்களிப்புக்குப் பரிந்துரை


ஏப்.06,2013. தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் சுதந்திரமாகவும், துணிச்சலுடனும் மனசாட்சிக்கு ஏற்ற வகையிலும் வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுள்ளார் தலைநகர் Caracas கர்தினால் Jorge Urosa.
ஒருவரின் வாக்குத் தனிப்பட்ட ஆளுடையது, அவர் யாருக்கு ஓட்டுப்போடுகிறார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில் இருத்த வேண்டுமென்று கர்தினால் Urosaவும், அவரின் துணை ஆயர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
முறையற்ற அச்சுறுத்தல்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவ்வறிக்கை, சுதந்திரமாக ஓட்டளிப்பது ஒருவரின் உரிமையும் கடமையும் என்பதால், தேர்தலில் சுதந்திரமாகவும், துணிச்சலுடனும் மனசாட்சிக்கு ஏற்ற வகையிலும் செயல்படுமாறு கேட்டுள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.