ஏப்.03,2013. சிறையில் அடைபட்டிருக்கும்போது எங்கள் வாழ்வை மீண்டும் ஒரு முறை பின்னோக்கிப்
பார்க்க இறைவன் வாய்ப்பளிக்கிறார் என்று இலங்கையில் உள்ள ஒரு சிறைக் கைதி கூறினார். திருக்குடும்பத்
துறவுச் சபையைச் சார்ந்த அருள் சகோதரிகளின் முயற்சிகளால், இலங்கையில் உள்ள Welikada சிறையில்
புனித வார நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புனித வெள்ளியன்று நடைபெற்ற சிலுவைப் பாதையிலும்,
உயிர்ப்பு ஞாயிறன்று நடைபெற்ற திருப்பலியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் கலந்துகொண்டனர்
என்றும் இவர்களில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைப் பேசும் கைதிகள் உள்ளனர் என்றும் அருள்தந்தை
பிரசன்னா பெர்னாண்டோ ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார். தமிழ், சிங்களம் ஆகிய இரு
மொழிகளிலும் நடத்தப்பட்ட இச்சடங்குகளின்போது கைதிகள் பக்தியுடன் பங்கேற்றதும், உயிர்ப்பு
ஞாயிறு திருப்பலியில் காணிக்கைப் பவனியின்போது கைதிகள் எரியும் மெழுகுகள் ஏந்தி வந்ததும்
அர்த்தம் நிறைந்ததாக இருந்தன என்று அருள்தந்தை பெர்னாண்டோ கூறினார்.