டூரின் நகரின் புனிதத் துணி இயேசு காலத்தைச் சேர்ந்ததே
ஏப்.02,2013. இன்றளவும் இத்தாலியின் டூரின் நகரில் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும், இயேசுவின்
இறந்த உடலை போர்த்திய புனிதத்துணி, முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான் என புதிய அறிவியல்
சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளாதாக இச்சோதனைகளை நடத்திய பதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்
ஒருவர் கூறினார். இயேசுவின் உடலைப் போர்த்தியதென கருதப்பட்டு, பாதுக்காக்கப்படும்
இந்தப் புனிதத்துணி, 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என சிலரால் சந்தேகம் எழுப்பப்பட்டத்தைத்
தொடர்ந்து, தற்போது இத்தாலியின் பதுவை நகர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ள சில முக்கிய
சோதனைகள் மூலம் இது இயேசு காலத்தைய துணிதான் என்பது நிரூபணமாகியுள்ளதாக இச்சோதனைக் குழுவில்
இடம்பெற்றிருந்த பேராசிரியர் ஜூலியோ ஃபாந்தி தெரிவித்தார். இரு வேதியல் சோதனைகளுக்கும்
ஒரு பொறியியல் சோதனைக்கும் இப்புனித துணி உட்படுத்தப்பட்டதிலிருந்து இவ்வுண்மை தெரிய
வந்ததாகத் தெரிவித்த பெராசிரியர் ஃபாந்தி, அனைத்து சோதனைகள் மூலமும் கிடைத்த முடிவு என்னவெனில்
இப்புனிதத்துணி, கி.மு. 33க்கும், அதைத்தொடர்ந்த 250 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தைச்
சார்ந்தது என்பதேயாகும் என மேலும் உரைத்தார்.