குடும்ப வாழ்வுக்கு ஆதரவான அமெரிக்கப் பேரணிக்குத் திருப்பீட அதிகாரி வாழ்த்து
மார்ச்,26,2013. குடும்ப வாழ்வுக்கு ஆதரவாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் இச்செவ்வாயன்று
இடம்பெற்ற பேரணிக்குத் தனது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளார் திருப்பீட குடும்ப
அவைத் தலைவர் பேராயர் Vincenzo Paglia. “திருமணம் : தனித்துவமிக்க காரணத்துடன்” என்ற
தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின்(USCCB) ஆதரவுடன் நடத்தப்பட்ட இப்பேரணியில்,
பிற கிறிஸ்தவ சபைகளின் பங்கேற்பையும் பார்த்தது ஊக்கமூட்டுவதாய் இருந்தது என்றும் பேராயர்
Paglia தனது செய்தியில் கூறியுள்ளார். இந்தப் பேரணி புனித வாரத்தில் இடம்பெற்றது
குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பேராயர், இயேசு தம் வாழ்வை நமக்காகத் தந்த மாபெரும்
தியாகத்தை அதிகமாக நினைப்பதோடு, அவர் தம் தந்தைக்குப் பணிந்து நடந்ததையும், தம் மகன்
இறக்கும் வேளையில் சிலுவையடியில் நின்ற தாய் மரியாவின் பிரமாணிக்கமுள்ள அன்பையும் இவ்வாரத்தில்
திருஅவை தியானிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி