2013-03-25 16:20:26

திருத்தந்தை பிரான்சிஸ் உரோமையில் உள்ள யூத சமுதாயத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துக்கள்


மார்ச்,25,2013. எகிப்தின் அடிமைத்தளைகளிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச்சென்ற இறைவன், உங்களையும் பல துன்பங்களிலிருந்தும் விடுவித்து நலமுடன் காப்பாராக என்று திருத்தந்தை பிரான்சிஸ் யூத சமுதாயத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
உரோமையில் உள்ள யூத சமுதாயம் பாஸ்கா விழாவைக் கொண்டாடிவரும் இந்நாட்களில், அச்சமுதாயத்தின் தலைமை குருவான Riccardo Di Segni அவர்களுக்கு இத்திங்களன்று வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காக செபிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருவர் ஒருவர் மீது கொண்டுள்ள மதிப்பின் அடிப்படையில், கிறிஸ்தவ, யூத சமுதாயங்களிடையே எழும் உரையாடல் வருங்காலத்தில் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ள திருத்தந்தையின் இச்செய்தியைப் பெற்ற யூதத் தலைவர் Di Segni, தன் நன்றியையும், மகிழ்வையும் தெரிவித்தார்.ஆதாரம்- வத்திக்கான வானொலி







All the contents on this site are copyrighted ©.