குருத்து ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட இரு Twitterவழி செய்திகள்
மார்ச்,25,2013. இஞ்ஞாயிறன்று குருத்து ஞாயிறுத் திருப்பலியையும், நண்பகல் மூவேளை செப
உரையையும் வழங்கியத் திருத்தந்தை, அவற்றைத் தொடர்ந்து, இரு Twitter வழி செய்திகளையும்
வெளியிட்டார். இஞ்ஞாயிறு கொண்டாடப்பட்ட 28வது உலக இளையோர் நாளையொட்டி, புனித பேதுரு
பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த இளையோரை அகில உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்கு
வரும்படி தன் மறையுரையில் அழைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அதே செய்தியை உலகின் அனைத்து
இளையோருக்கும் விடுக்கும் நோக்கத்தில், வருகிற ஜூலை மாதம் ரியோ டி ஜெனீரோ நகரில் உங்களைச்
சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் என்ற Twitter செய்தியை வெளியிட்டார். இதை தொடர்ந்து,
உலகில் நிலவும் வன்முறை, அநீதி, பாவம் அவற்றிற்கு எதிராக நம்மால் ஒன்றும் செய்ய இயலாது
என்று சொல்லும் தீயவனை நாம் நம்பக்கூடாது என்ற இரண்டாவது Twitter செய்தியையும் வெளியிட்டார்
திருத்தந்தை பிரான்சிஸ். இவ்விரு Twitter செய்திகளும், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச்,
ஜெர்மன், இஸ்பானியம், அரேபியம் ஆகியவை உட்பட, 9 மொழிகளில் வெளியிடப்பட்டன.ஆதாரம்- வத்திக்கான
வானொலி