2013-03-23 15:58:19

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில் திருஅவையில் புதுப்பித்தல் ஏற்படும், CRI அமைப்பு


மார்ச்,23,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியேற்றுள்ள இவ்வேளையில், துறவு வாழ்வின் தனிவரம், திருஅவையில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவரும் என்று, CRI என்ற இந்திய துறவு சபைகள் அமைப்பு கூறியுள்ளது.
திருஅவை தனது மறைப்பணியைத் தூய்மையுடனும் திறமையுடனும் செய்வதற்கு, துறவு வாழ்வின் தனிவரம், திருஅவையில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவரும் என்பதை வரலாற்றில் மீண்டும் மீண்டும் காண முடிகின்றது என்று, CRI அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியேற்றுள்ளதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய துறவு சபைகள் அமைப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியேற்றுள்ள இவ்வேளையில், தூயஆவி இதனைச் சுட்டிக்காட்டுகிறார் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவில் 1,30,000 ஆயிரத்துக்கு அதிகமான இருபால் துறவியர் மறைப்பணியாற்றுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.