2013-03-22 16:19:28

திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொள்ள முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் அழைப்பு


மார்ச்,22,2013. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்ற தனது ஆவலைத் தெரிவித்துள்ளார் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல்.
புனித பிரான்சிஸ், கீழை நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சுல்தான் Malik al-Kamil என்பவரைச் சந்தித்தது போல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை விசுவாசத்தில் உறுதிப்படுத்த வேண்டுமென்று கூறினார் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல்
இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசியபோது இந்தத் தனது ஆவலைத் திருத்தந்தையிடம் முன்வைத்ததாகவும், அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றதாகவும் நிருபர்களிடம் கூறினார் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல்.








All the contents on this site are copyrighted ©.