இலண்டனில் Canterburyபேராயர் Justin Welbyஅவர்கள்
தலைமைப் பொறுப்பேற்கும் விழா
மார்ச்,21,2013. மார்ச் 21, இவ்வியாழன் பிற்பகல் மூன்று மணியளவில் Canterbury பேராயர்
Justin Welby அவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் விழா இலண்டனில் நடைபெற்ற தென்று ICN கத்தோலிக்கச்
செய்தி நிறுவனம் கூறியது. இளவரசர் சார்ல்ஸ், பிரதமர் David Cameron மற்றும் பேராயர்
Vincent Nichols ஆகியோருடன் இன்னும் பல தலைவர்களும், ஏனைய மதத் தலைவர்களும் கலந்து கொண்ட
இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். முன்னாள் ஆங்கலிக்கன் பேராயர் Rowan
Williams 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தலைமைப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து,
பேராயர் Justin Welby, Canterbury பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 597ம் ஆண்டு
புனித அகுஸ்தின் இங்கிலாந்துக்குச் சென்றபோது அவருடன் எடுத்துச்சென்ற விவிலியம் Canterbury
பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த விவிலியத்தின் மீது கைகளை வைத்து, ஆங்கலிக்கன்
சபையின் தலைமைப் பேராயர்கள் உறுதிமொழி எடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.