2013-03-20 16:13:59

மேய்ப்புப் பணிக்கென தன்னை வழங்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம் - பிரேசில் நாட்டு ஆயர்


மார்ச்,20,2013. சென்ற இடமெல்லாம் பிரபலம் அடைந்த இரண்டாம் ஜான்பால் அவர்களையும், ஆழ்ந்த எண்ணங்களுக்குப் பேர்பெற்ற 16ம் பெனடிக்ட் அவர்களையும் தொடர்ந்து, மேய்ப்புப் பணிக்கென தன்னை வழங்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம் என்று பிரேசில் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
16ம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்க மக்களுக்குக் கிறிஸ்துவை அறிமுகப்படுத்திய இயேசு சபையினரில் ஒருவர் தற்போது திருத்தந்தையாக பணி எற்றிருப்பது நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு கிடைத்துள்ள ஒரு பெரும் கோடை என்று அமேசான் பகுதியில் உள்ள Parintins மறைமாவட்டத்தில் பணிபுரியும் PIME பாப்பிறைக் கழகத்தைச் சேர்ந்த ஆயர் Giuliano Frigeni கூறினார்.
2007ம் ஆண்டு இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் பொது அவை நிகழ்ந்தபோது, அங்கு வெளியான ஓர் அறிக்கையில் ஆயர்கள் மேற்கொள்ள வேண்டிய மறைபரப்புப் பணி குறித்த தெளிவான கருத்துக்கள் கூறப்பட்டன என்றும், இவ்வறிக்கையை வடிவமைக்க அப்போது கர்தினாலாகப் பணியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் பெரிதும் உதவினார் என்றும் ஆயர் Frigeni நினைவு கூர்ந்தார்.
இலத்தீன் அமெரிக்காவில் நிலவும் ஏழ்மையும், அந்நாடுகள் அனுபவிக்கும் பின்தங்கிய நிலையும் திருத்தந்தையின் தலைமைப் பணிக்கு புதிய வழிகளைத் திறக்கும் என்றும் ஆயர் Frigeni தன் நம்பிக்கையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.