திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முதுபெரும் தலைவர் Bartholomew வழங்கிய
வரவேற்புரை
மார்ச்,20,2013. இறையருளால் தூண்டப்பட்டு, தாங்கள் உரோமையின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
குறித்து பேரு மகிழ்வடைகிறோம் என்று Constantinople முதுபெரும் தலைவர் Bartholomew கூறினார். பல்வேறு
கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும், யூத மற்றும் வேறுபல மதங்களின் பிரதிநிதிகளையும்
இப்புதனன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்த வேளையில், அவருக்கு வரவேற்புரை
வழங்கிய முதுபெரும் தலைவர் Bartholomew இவ்வாறு கூறினார். முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்கள் உன்னதமான எண்ணங்கள் கொண்டவர் என்பதையும் சுட்டிக்காட்டிய முதுபெரும்
தலைவர் Bartholomew, தற்போது பணியேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தும்
எளிமையையும் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார். கிறிஸ்துவின் படிப்பினைகளை, கடந்த 2000
ஆண்டுகள் போதித்துவரும் பல்வேறு சபைகள், தவறான வழிகளில் மக்களை நடத்திச்செல்லும் ஆபத்தையும்
முதுபெரும் தலைவர் Bartholomew தன் உரையில் எடுத்துரைத்தார். அன்பிலும், தாழ்ச்சியிலும்,
ஒருவரை ஒருவர் முழுமையாக மதித்து மேற்கொள்ளப்படும் உரையாடல்களே பலனளிக்கும் என்பதையும்
Constantinople முதுபெரும் தலைவர் Bartholomew தன் வரவேற்புரையில் வலியுறுத்தினார்.