மார்ச்,18,2013. இத்திங்களன்று அர்ஜென்டினா அரசுத்தலைவர் வத்திக்கான் வந்து, புதிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார். அர்ஜென்டினா நாட்டு தலைநகர் Buenos Airesன்
பேராயராக இருந்தபோது தேர்ந்தெடுக்கபட்ட புதிய திருத்தந்தையைச் சந்திக்க வந்த அந்நாட்டு
அரசுத்தலைவர் Cristina Fernandes de Kirchnerடன் ஏறத்தாழ 20 நிமிடங்கள் உரையாடியபின்,
அவரோடு இணைந்து மதிய உணவை அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள் காலை உள்ளூர்
நேரம் 10 மணியளவில் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களையும்
சந்தித்து உரையாடினார் பாப்பிறை. இதற்கிடையே, ஞாயிறன்று மாலை இயேசுசபை அதிபர் Adolfo
Nicolas அவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.