திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் தாய்வான் அரசுத்தலைவர்
மார்ச்,16,2013. வருகிற செவ்வாயன்று வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் கலந்து கொள்ளவிருக்கிறார் தாய்வான் அரசுத்தலைவர்
Ma Ying-jeou. இத்தகவலை உறுதி செய்து அறிக்கை வெளியிட்ட தாய்வான் வெளியுறவு அமைச்சகம்,
தாய்வான் அரசுத்தலைவர் வத்திக்கானுக்கு வருவது இது இரண்டாவது தடவையாக இருக்கும் என்று
கூறியுள்ளது. ஐரோப்பாவில் வத்திக்கான் மட்டுமே தாய்வானுடன் அரசியல் உறவைக் கொண்டிருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.