காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
ஓர் ஆசீர்வாதமான தெரிவு
மார்ச்,16,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
ஓர் ஆசீர்வாதமான தெரிவு என்று சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அவரைத்
தேர்ந்தெடுத்துள்ள கர்தினால்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்
எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுக்குத் தனது தனிப்பட்ட வாழ்த்தைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ள
முதுபெரும் தலைவர் 2ம் Tawadros, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி மூலம், கத்தோலிக்கத்
திருஅவை உலகம் முழுவதும் வளர்ந்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரட்டும் என வாழ்த்தியுள்ளார்.