2013-03-16 16:39:12

ஊடகவியலாளர் குறித்து திருத்தந்தையிடம் பேராயர் Celli


மார்ச்,16,2013. இச்சனிக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli, வத்திக்கானில் இந்நாள்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை பொது மக்களுக்குக் கொண்டு செல்வதில் ஊடகவியலாளர் மீண்டும் நல்லதொரு பணியைச் செய்துள்ளனர் என்று கூறினார்.
உலகத்தினர் மிகுந்த ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும், அக்கறையோடும் இந்நாள்களின் நிகழ்வுகளைப் பார்த்தனர் என்றும், ஊடகத் துறையினர் சுதந்திரத்துடனும், தங்களது தொழில் திறமைகளுடனும் இந்நாள்களின் அனைத்து நிகழ்வுகளையும் வெளியிட்டனர் என்றும் பேராயர் Celli எடுத்துச் சொன்னார்.
81 நாடுகளைச் சார்ந்த ஊடகவியலாளர் இங்கு உள்ளனர் என்றுரைத்த பேராயர், இச்சந்திப்பில் திருத்தந்தையின் வார்த்தைகள், ஊடகவியலாளரின் உண்மையிலும் தேடலிலுமான வாழ்க்கையில் சுடர்விடும் என்பதையும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.