உரோம் யூதமத ராபிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம்
மார்ச்,15,2013. யூதர்களுக்கும் கத்தோலிக்கருக்கும் இடையேயான உறவுகள் மேம்படுவதற்கு நிறையச்
செய்ய முடியும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கர்தினால்
Jorge Mario Bergoglio திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி வாழ்த்துச் செய்தி
அனுப்பிய உரோம் யூதமதத் தலைமை ராபி Riccardo Di Segni அவர்களுக்குப் பதில் அனுப்பியுள்ள
திருத்தந்தை பிரான்சிஸ், மார்ச் 19ம் தேதி திருத்தந்தையாகத் தான் பொறுப்பேற்கும் திருப்பலி
இடம்பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எல்லாம்வல்ல இறைவனின் பாதுகாவலில் நம்பிக்கை
வைத்து இந்தப் பணியைச் செய்ய இயலும் என்று தான் நம்புவதாகவும் திருத்தந்தை அதில் தெரிவித்துள்ளார்.