வருகிற ஞாயிறன்று Argentinaதலத்திருஅவையில் அனைத்து கோவில்களிலும்
நன்றி திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்
மார்ச்,14,2013. அன்புள்ள சகோதரர் ஜார்ஜ், வரலாற்றின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை
திருஅவைத் தலைவராக இன்றையக் காலக்கட்டத்தில் தேர்ந்தெடுத்திருப்பது, Argentina மக்களுக்குப்
பேருவகையைத் தருகிறது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் José Maria Arancedo
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். வருகிற ஞாயிறன்று
Argentina தலத்திருஅவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் நன்றி திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுமாறு
பேராயர் Arancedo அனைத்து ஆயர்களுக்கும் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடன் 13 ஆண்டுகள் பணியாற்றிய Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் குருகுல
முதல்வர், பேரருள்தந்தை Joaquín Sucunza, வயது முதிர்ந்தோர், ஏழைகள், குருக்கள் ஆகியோருக்கு
மிக நெருங்கியவராக வாழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்கத் திருஅவைக்கும், Argentina
தலத் திருஅவைக்கும் கிடைத்துள்ள மிகப் பெரும் கொடை என்று கூறியுள்ளார்.