2013-03-13 16:25:13

துபாயில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிகள்


மார்ச்,13,2013. துபாயில் உள்ள மூவொரு இறைவன் கோவில் அதிகாரிகளும், இலங்கை தூதரகத் தலைமை அதிகாரியும் இணைந்து, துபாயில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
துபாயில் அமைந்துள்ள மூவொரு இறைவன் கோவில் ஆங்கிலிக்கன் சபையின் நேரடி கண்காணிப்பில் இருந்தாலும், 120க்கும் மேற்பட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள் இக்கோவிலைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று இக்கோவிலின் நிர்வாகியான Ruwan Palapathwala என்ற போதகர் கூறினார்.
அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கை நாட்டவர் 2,75,000 பேர் என்றும், இவர்களில் 50 விழுக்காட்டினர் வீடுகளில் பணிபுரிபவகள் என்றும் போதகர் Palapathwala சுட்டிக்காட்டினார்.
மூவொரு இறைவன் கோவில் ஒவ்வொரு வாரமும் 11000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்றும், இவர்களில் 6000 பேர் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றும் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.