2013-03-13 16:20:34

Boko Haram என்ற குழுவின் பெயரில் பல்வேறு அமைப்புக்கள் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன - நைஜீரியப் பேராயர்


மார்ச்,13,2013. நைஜீரியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் Boko Haram என்ற குழுவின் பெயரில் பல்வேறு அமைப்புக்கள் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama தெரிவித்தார்.
லெபனான், கிரீஸ், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஏழுபேரை அண்மையில் கடத்தி, கொலை செய்த Ansaru என்ற குழுவைக் குறித்துப் பேசிய Jos பேராயர் Kaigama இவ்வாறு கூறினார்.
Boko Haram என்ற குழுவின் பெயரால் வன்முறைச் செயல்கள் தற்போது நைஜீரியாவில் மட்டுமல்லாமல், Cameroon, Mali போன்ற பல்வேறு ஆப்ரிக்க நாடுகளிலும் பரவியுள்ளதைக் காண முடிகிறது என்று பேராயர் Kaigama சுட்டிக்காட்டினார்.
வன்முறையாளர்களின் கொடுமைகளை நிறுத்த ஆப்ரிக்க நாடுகளின் பல்வேறு அரசுகளும், வெளிநாட்டு அரசுகளும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் Kaigama அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.