இலங்கையில் அமைதியானப் போராட்டத்தில் கலந்துகொள்ள முயற்சித்த நூற்றுக்கணக்கான தமிழர்களுக்குத்
தடை
மார்ச்,09,2013. இலங்கையின் வடபகுதியில் மக்கள் கட்டாயமாகக் காணாமல் போவதைக் கண்டித்து
அமைதியானப் போராட்டம் மேற்கொள்ள முயற்சித்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களைக் காவல்துறையும்
இராணுவமும் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பல மணி நேரங்கள்
மழையில் காத்திருந்து 10 பேருந்துகளில் பயணம் செய்து வந்த மக்கள், வவுனியாவிலிருந்து
அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு செல்லவிருந்தனர். ஆயினும் இரண்டு பேருந்துகள்
மட்டுமே புறப்பட்டுச் சென்றன எனவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை அரசின் இந்நடவடிக்கை
குறித்து கருத்து தெரிவித்த ஊடகவியலார், அமைதியானப் போராட்டத்தில் கலந்துகொள்ள முயற்சித்த
இம்மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக அரசின் இச்செயல் இருக்கின்றது என்று கூறியுள்ளனர்.