2013-03-08 15:29:57

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதி உரைகளைப் புத்தகமாக வெளியிடத் திட்டம்


மார்ச்,08,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த நேரமுதல், அவர் திருத்தந்தையாகப் பணியாற்றிய கடைசி நாள்வரை ஆற்றிய உரைகள் அனைத்தும் புத்தகமாக வருகிற திங்களன்று (மார்ச் 11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை”(“Non mi sono mai sentito solo”) என்ற தலைப்பில் வெளியாகும் இந்தப் புத்தகத்தில், திருத்தந்தையின் பதவி விலகல் உரை, திருநீற்றுப்புதன் மறையுரை, உரோம் மறைமாவட்ட குருகுலத்தாருக்கு ஆற்றிய உரை ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.
இம்மாதம் 11ம் தேதி இப்புத்தகத்தை வெளியிடவிருக்கும் வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனம், “நம்பிக்கை ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்” என்ற தலைப்பில் மற்றுமொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
நம்பிக்கை ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய புதன் பொது மறைபோதக உரைகள், இந்த இரண்டாவது புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் என, வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.