மார்ச்,05,2013. ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் 82 வயதாகும் ப்ரெஞ்ச் அருள்சகோதரி Marie
Emmanuel Helesbeux என்பவர் கடந்த வெள்ளியன்று கொலை செய்யப்பட்டுள்ளார். மடகாஸ்கரின்
வடகிழக்கே, 42 ஆண்டுகளாக இச்சகோதரி மறைப்பணியாற்றிவந்த Mandritsara கிராமத்தில் 3 பேர்
சேர்ந்து இவரைத் தடியால் அடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். Mandritsara
கிராம மக்களால் பெரிதும் அன்பு செய்யப்பட்டு மதிக்கப்பட்டிருந்த அருள்சகோதரி Marie Emmanuel
Helesbeux கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, அக்கிராம மக்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில்
ஈடுட்டனர் என Antananarivoலுள்ள தொன்போஸ்கோ வானொலியின் இயக்குனர் அருள்பணி Luca Treglia
கூறினார். இதற்கிடையே, குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். காவல்துறையும்
அவர்களைக் கைது செய்துள்ளது.