வியட்நாமில் கத்தோலிக்கர்கள் விடுவிக்கப்படவிழிப்புணர்வு போராட்டம்
மார்ச்,04,2013. வியட்நாமில் மதக் காரணங்களுக்காகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்கர்கள்
விடுதலை செய்யப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தில் அந்நாட்டின் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர். கத்தோலிக்கர்கள்
தொடர்ந்து சிறைவைக்கப்பட்டு வருவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக,
அண்மையில் துவக்கப்பட்ட கையெழுத்துச் சேகரிப்பு முயற்சியில் பல புத்த மற்றும் கிறிஸ்தவத்
தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அப்பாவி மக்கள் சிறைவைக்கப்படுவது குறித்து மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த முயற்சி 'சட்டவிரோத விசாரணைகளுக்கு எதிர்ப்பு' என்ற
தலைப்பில் ஜனவரி மாதம் 27ம் தேதி துவக்கப்ப்பட்டது. மத காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட
கத்தோலிக்கர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் இரு குழுக்களாக வியட்நாமின்
தெற்கிலும் வடக்கிலும் இடம்பெறும் இப்பிரச்சாரம் இதுவரை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துக்களை
திரட்டியுள்ளது.