மதமும் மக்களாட்சியும் என்பது குறித்து கத்தோலிக்கக் கருத்தரங்கு
மார்ச்,04,2013. அரபு வசந்தம் என்றஎழுச்சிக்குப் பின் அரபு உலகிலும் ஐரோப்பாவிலும் மதமும்
மக்களாட்சியும் என்றதலைப்பில் உரோம் நகரில் ஒரு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடுச் செய்துள்ளது
கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பானசான் எஜிதியோ அமைப்பு. நாடுகளிடையேயானஒத்துழைப்பிற்கானஇத்தாலியஅமைச்சர்
Andrea Riccardiயின் துவக்கஉரையுடன் இச்செவ்வாயன்று இடம்பெறும் கருத்தரங்கில் டுனிசியா,
எகிப்து, ஈராக், சிரியா, லெபனன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாம் மற்றும் சில
கிறிஸ்தவ வல்லுனர்களும் கலந்துகொள்கின்றனர். நாடுகளில் அமைதியை ஏற்படுத்த அயராது
உழைத்து வரும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான சான் எஜிதியோ குழுவின் இந்த முயற்சி, 'அரபு
வசந்தம்' என்ற எழுச்சிக்குப்பின் அரபு உலகிலும் ஐரோப்பாவிலும் மதமும் மக்களாட்சியும்
என்பது குறித்து ஆழமாக விவாதிக்கும்.