2013-03-01 15:49:56

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களது பதவி விலகல் குறித்த தபால்தலை


மார்ச்01,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப்பணியின் நிறைவைக் குறிக்கும் சிறப்புத் தபால்தலையை வத்திக்கான் தபால்நிலையம் வழங்கி வருகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்த்தும் கரங்களும், வத்திக்கான் பசிலிக்காவும் அதில் உள்ளன. “திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறைப் பணியிலிருந்து விலகுகிறார், வத்திக்கான் தபால் 28.2.2013” என இலத்தீனில் அதில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருப்பதைக் குறிக்கும் Sede Vacante தபால்தலைகளும் இவ்வெள்ளி முதல் வத்திக்கான் தபால்நிலையத்தில் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.