2013-02-27 16:27:03

நம்பிக்கை ஆண்டையும், தவக்காலத்தையும் இணைத்து, கவுத்தமாலா ஆயர்கள் வெளியிட்டுள்ள மடல்


பிப்.27,2013. பாவத்தை விட்டு விலகி, வாழ்வை நோக்கி பயணிக்க இது நல்லதொரு தருணம் என்று கவுத்தமாலா ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது நடைபெறும் நம்பிக்கை ஆண்டையும், அண்மையில் துவக்கப்பட்ட தவக்காலத்தையும் இணைத்து, ஆயர்கள் வெளியிட்டுள்ள ஒரு மடலில், கவுத்தமாலா நாட்டில் நிலவும் பல்வேறு அநீதிகளை ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வறுமையில் வாடும் சகோதர சகோதரிகள் பேரில் அக்கறையற்ற நிலை, தனி மனிதர்களுக்கும், மனித உயிர்களுக்கும் மதிப்பு வழங்க மறுக்கும் நிலை, குடும்பங்களில் இருக்கவேண்டிய பொறுப்புக்கள் குறைந்துவரும் நிலை ஆகிய பாவ நிலையிலிருந்து கவுத்தமாலா நாடு விடுதலைப் பெறவேண்டுமென்று ஆயர்கள் தங்கள் மடலில் கூறியுள்ளனர்.
"கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது" என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த மடலில், நடைபெறும் நம்பிக்கை ஆண்டு விடுக்கும் சிறப்பான அழைப்பை மக்களுக்கு மீண்டும் நினைவுருத்தியுள்ளனர் கவுத்தமாலா ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.