2013-02-27 16:17:54

திருத்தந்தை வழங்கிய மறைபோதகங்களில் கலந்து கொண்டோர் 51,16,600 பேர்


பிப்.27,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இப்புதனன்று வழங்கிய இறுதி புதன் பொது மறைபோதகத்தில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
2005ம் ஆண்டு 27ம் தேதி திருத்தந்தை தன் முதல் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார். 2013ம் ஆண்டு பிப்ரவரி 27, இப்புதனன்று இறுதி மறைபோதகத்தை வழங்கினார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் வழங்கிய 348 புதன் பொது மறைபோதகங்களில் கலந்துகொண்ட மக்கள் எண்ணிக்கையைக் குறித்த புள்ளிவிவரங்களை திருப்பீடம் வெளியிட்டுள்ளது.
2006ம் ஆண்டு அவர் வழங்கிய 45 மறைபோதகங்களில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 500 பேர் என்ற எண்ணிக்கையில் அதிக அளவு கலந்து கொண்டனர்.
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2013ம் ஆண்டு பிப்ரவரி முடிய எட்டு ஆண்டுகள் நடைபெற்ற புதன் பொது மறைபோதகங்களில் 51 இலட்சத்து, 16,600 பேர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.