2013-02-26 15:51:17

புனிதத் திருத்தந்தையருள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


பிப்.26,2013. கடந்த நூற்றாண்டு முழுவதும் இறைவன் அசாதாரணத் திருத்தந்தையர்களால் திருஅவையை ஆசீர்வதித்துள்ளார் என்று இஸ்பானிய ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த நூற்றாண்டில் திருஅவை கொண்டிருந்த திருத்தந்தையர்களுள் ஏறத்தாழ அனைவருமே புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் அல்லது அந்த நிலைக்கு உயர்த்துவதற்கான நடைமுறையில் உள்ளனர் என Cordoba ஆயர் Demetrio Fernandez கூறினார்.
திருத்தந்தையர் 10ம் பத்திநாதர், 12ம் பத்திநாதர், 23ம் அருளப்பர், 6ம் பவுல், முதலாம் அருள் சின்னப்பர், இரண்டாம் அருள் சின்னப்பர் ஆகியோர் வரிசையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் தற்போது இணைந்துள்ளார் என்றும் ஆயர் Fernandez கூறினார்







All the contents on this site are copyrighted ©.