2013-02-26 15:49:40

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நம் இதயங்களை விட்டு விலக மாட்டார், வாஷிங்டன் கர்தினால்


பிப்.26,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர் நம் இதயங்களைவிட்டு விலகமாட்டார் என வாஷிங்டன் கர்தினால் Donald W. Wuerl கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கென நிகழ்த்திய நன்றித் திருப்பலியில் கலந்து கொண்ட மூவாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளிடம் இவ்வாறு உரைத்த கர்தினால் Wuerl, திருத்தந்தையின் பதவி விலகல், அகிலத் திருஅவையின் தேவைகளை நன்கறிந்த அவரது திறமையையும் பெருந்தன்மையையும் காட்டுகின்றது என்று கூறினார்.
மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் திருத்தந்தை, உலகப்போக்கு அதிகரித்துவரும் இன்றையச் சமூகங்களில் விசுவாசத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்குவதை ஊக்குவிக்குவிப்பவராகவும், நவீன சமூகத் தொடர்புச்சாதனங்களில் தேர்ந்தவராகவும் இருப்பது நல்லது எனவும் கூறினார் கர்தினால் Wuerl.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் கர்தினால்கள் அவையில் கர்தினால் Wuerlம் பங்கு கொள்வார்.







All the contents on this site are copyrighted ©.