அன்பு நெஞ்சங்களே, பிப்.26. 2013. திருத்தந்தை ஒருவர் பணிஓய்வு பெறுவது என்பது ஏறத்தாழ
600 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இடம்பெறுகிறது. இம்மாதம் 28ம் தேதி மாலை பணி ஓய்வுபெறும்
நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 27ம் தேதி புதனன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில்
மக்களை இறுதிமுறையாகச் சந்திக்கிறார். 28ம் தேதி திரு அவையின் கர்தினால்களைச் சந்தித்து
உரையாடியபின், அன்று மாலை 5 மணியளவில் தன் தலைமைப்பொறுப்பிலிருந்து விடைபெற்று திருத்தந்தையர்களின்
காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திற்குச் செல்கிறார். இந்த புதனும் வியாழனும்
இடம்பெறும் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக ஒலி-ஒளி வடிவில் உங்களுக்கு
வழங்குகிறது வத்திக்கான் வானொலி. இந்த எம் இணையதளப் பக்கத்திலேயே மேல் பகுதியில் காணப்படும்
'வீடியோக்கள்’ என்ற தலைப்பின் கீழ் உள்ள ‘இணையத்தொலைக்காட்சி’ என்பதை அழுத்தினால் உங்களுக்கு
எம் நேரடி ஒளிபரப்பு வந்தடையும்.
நேரடி ஒளிபரப்பு நேரங்கள் – பிப்ரவரி
27. புதன் - உரோம் நேரம் காலை 10.25 முதல் 12.00 வரை (இந்திய நேரம் மாலை 2.55 முதல் 4.30
வரை) பிப்ரவரி 28. வியாழன் - உரோம் நேரம் மாலை 4.30 முதல் 6.30 வரை (இந்திய நேரம்
இரவு 9.00 முதல் 11.00 வரை)