பிப்.26,2013. எட்டாவது அனைத்துலக குடும்ப மாநாடு 2015ம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் 27
வரை, அமெரிக்க ஐக்கிய நாட்டு பிலடெல்பியாவில் நடைபெறும் திருப்பீடம் அறிவித்துள்ளது. எட்டாவது
அனைத்துலக குடும்ப மாநாடு குறித்த விபரங்களை வெளியிட்ட பிலடெல்பியா பேராயர் Charles J.
Chaput, குடும்பங்களின் ஒருங்கிணைப்பை நாம் எவ்வளவுக்கெவ்வளவு ஊக்கப்படுத்தி ஆதரவுளிக்கின்றோமோ,
அவ்வளவுக்கவ்வளவு சமுதாயம் நலமானதாக மாறும் என்று கூறினார். உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கு
ஆதரவளித்து அவற்றை உறுதிப்படுத்தும் வழிகளைத் தேடுவதற்கென 1994ம் ஆண்டில் முத்திப்பேறு
பெற்ற திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் அனைத்துலக குடும்ப மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.