2013-02-25 17:28:03

பெல்ஜியம் கர்தினால் மறைவு. திருத்தந்தையின் அனுதாபச்செய்தி


பிப்.25,2013. பெல்ஜியம் நாட்டு கர்தினால் Julien Ries இறைபதம் அடைந்ததையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
1920ம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த கர்தினால் Ries, 1945ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். தனது 91ம் வயதில், கடந்த ஆண்டு துவக்கத்தில் இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
இவரின் மறைவு குறித்து திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், மதங்களின் வரலாறு தொடர்புடைய துறைகளில் கர்தினால் தன் கல்வி மற்றும் ஆய்வுகள் மூலம் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார். கர்தினாலின் இழப்பால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு தன் ஆறுதலின் வார்த்தைகளையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.