2013-02-23 17:12:44

தமிழகத்தில் போலியோ இல்லை : அரசு அறிவிப்பு


பிப்.23,2013. தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் போலியோ நோயினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து பிரச்சாரத்திற்காக, 2 இலட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர் பிரச்சாரங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழக நலத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலையம், விமான நிலையம், இரயில் நிலையம் ஆகியவற்றில் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் இந்த முகாம்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.