திருத்தந்தையின் பதவி விலகல்குறித்து பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுடன்
ஒரு சந்திப்பு
பிப்.22,2013. அன்பர்களே, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இம்மாதம் 28ம் தேதி உரோம்
நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அன்று மாலை 5 மணிக்கு வத்திக்கானிலிருந்து
காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்குப் புறப்படுகிறார். அவரோடு அவரது செயலர் பேராயர் Georg Ganswein
மற்றும் அவருக்கு உணவு தயாரித்து கொடுத்த அருள்சகோதரிகளும் செல்கின்றனர். திருத்தந்தையின்
இந்தப் பதவி விலகல் அறிவிப்பைக் கேட்ட பின்னர், பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து
வருகின்றனர். இது தொடர்பாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி
அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.